நாங்குநேரி அருகே தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி திறப்பு

களக்காடு,பிப்.24:  நாங்குநேரி அருகே பரப்பாடியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தள கமாண்டிங் ஆபீசர் நிஷாந்த் குமார் ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்தார்.  விழாவில் மண்டல மேலாளர் நவநீதகிருஷ்ணன், இலங்குளம் பஞ். தலைவர் இஸ்ரவேல் பிரபாகரன், பரப்பாடி ஷாலோம் மருத்துவமனை டாக்டர்கள் அலெக்ஸ் எட்வர்ட்ஸ், எலிசபெத் ஜார்ஜ், வடக்கு விஜயநாராயணம் இன்ஸ்பெக்டர் நாககுமாரி, வணிகர் சங்கத்தலைவர் எட்வின் ஜோஸ், நாங்குநேரி ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின், எழுத்தாளர் மதுரா, தொழிலதிபர்கள் வேல்துரை, ஆபிரகாம் தர்மராஜ், யோவான் பிரபு, ஸ்டீபன், ராஜன், முருகன், குமரகுரு, முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். வங்கி கிளை மேலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

Related Stories: