காரைக்காலில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது

காரைக்கால், பிப். 24:   காரைக்கால் சேத்திலால் நகரை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டு பின் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, இவரது வீட்டின் அருகே குடியிருக்கும் முருகேசன் (35) என்பவர், குளியலறை இடைவெளியில் செல்போனை வைத்து அப்பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த பெண், தனது கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவரது கணவர், தனது நண்பர்கள் உதவியுடன் செல்போனை கைப்பற்றி, வீடியோ எடுத்த முருகேசனை கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுதொடர்பாக போலீசார் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: