தேனி, பிப். 24: தேனியில் நடந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் வழங்கும் முகாமில் 244 பேருக்கு கடன்களை கலெக்டர் வழங்கினார். தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் தொழில்முனைவோர் உள்ளிட்டோருக்கு நேற்று தொழிற்கடன் வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு தொழில் வணிக துறை ஆணையர் தாமஸ்வைத்யன் தலைமை வகித்தார். தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியின்போது சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் மூலம் 244 பேருக்கு ரூ.30 கோடியே 58 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளை தொழில் வணிகத் துறை ஆணையர் தாமஸ்வைத்யன் மற்றும் கலெக்டர் ஷஜீவனா ஆகியோர் வழங்கினர்.