நெல்லை பல்கலையில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

நெல்லை, பிப். 22: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக என்எஸ்எஸ் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.இதில் வாசுகி வரவேற்றார். ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் நைனாமுகம்மது, ரோட்டரி கிளப் தலைவர் இப்ராகிம், நெல்லை கேன்சர் கேர் திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் ஆகியோர் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, தனி மனித ஒழுக்கம், சமூக சுய கட்டுப்பாடுகள் குறித்து பேசினர். டாக்டர்கள் அபிராமி, பாண்டி செல்வி ஆகியோர் புற்றுநோய்களின் வகைகள், புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து பேசினர். நிகழ்வில் திட்ட அலுவலர்கள் பேராசிரியர் சென்றாய பெருமாள், பேராசிரியர் லெனின் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: