வேளச்சேரி, அக்.1: அடையாறு சாஸ்திரி நகர், 7வது லேன் பகுதியை சேர்ந்தவர் கன்னியம்மா. இவரது மகள் பானு (28). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விமல்ராஜ் என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஏஞ்சல் என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக, பானு கடந்த ஒரு ஆண்டாக கணவர் விமல்ராஜை பிரிந்து, அதேபகுதியில் வசித்து வருகிறார். இதனிடையே, அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகனுடன், பானுவுக்கு நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பானு தனது குழந்தை ஏஞ்சலுடன் ஜெகன் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பானு கன்னியம்மாவுக்கு போன் செய்து குழந்தை ஏஞ்சலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.