தஞ்சாவூர், அக்.1: தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் வாக்காளர்கள் விருப்பத்தின் பேரில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணியில் பொது மக்களின் வசதிக்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 2,305 வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களைக் கொண்டு ஆதார் எண் இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம் கடந்த 11.09.2022 அன்று நடைபெற்றது.
அந்த சிறப்பு முகாமில் 1,41,214 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை படிவம் 68 -ல் பூர்த்தி செய்து வாக்குச்சாவடிகளிலுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொண்டனர்.