மேலகரம் பள்ளியில் இலவச சைக்கிள்கள்

தென்காசி, அக். 1:  தென்காசியை அடுத்த மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமை வகித்தார். திமுக பேரூர் செயலாளர் சுடலை, பேரூராட்சி துணை தலைவர் ஜீவானந்தம், கவுன்சிலர்கள் பூமா, மகேஸ்வரன், சிங்கத்துரை முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை கவிதா வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் துரை தொகுத்து வழங்கினார். விழாவில் பழனி நாடார் எம்எல்ஏ பங்கேற்று 70 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை  வழங்கி பேசினார். நிகழ்ச்சியில்  திமுக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன்,  கல்யாணிசுந்தரம், நன்னை சுந்தர், பாலு, பூபதி, பகவதிராஜ், பட்டமுத்து, குருசாமி,

காங். வட்டார தலைவர் பெருமாள், பேரூர் தலைவர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி ஜோதிடர், நகர்மன்ற கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் பேரூர் தலைவர் முருகன், சுந்தரபாண்டியபுரம் முத்துவேல், பிரபாகரன், செண்பகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் ரெஜினா பானு நன்றி கூறினார்.

Related Stories: