சிங்கம்புணரி அக். 1: சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜு முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் உதயசூரியன் பேசும்போது எஸ் எஸ் கோட்டை ஊராட்சியில் சாலை விரிவாக்க பணிகள் காரணமாக குடிநீர் இணைப்புகள் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் இக்கிராம மக்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.