மதுரை, அக். 1: மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வு கலந்துகொண்டு, ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் 200 பேர் பணியிட மாற்றம் பெற்றனர். மதுரை உள்மாவட்ட அளவில் பள்ளிக்கல்வித்துறையில் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலக பணியாளர்களை கட்டாய பணியிடம் மாற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இதன்படி, கல்வித்துறையில் உள்ள அலுவலர்களுக்கு, பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கடந்த செப்.27ம் தேதி துவங்கியது. முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா மேற்பார்வையில் நடந்த இந்த கலந்தாய்வில், அனைத்து கல்வித்துறை அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவிக்கண்காணிப்பாளர்கள், தட்டச்சர்கள்,