மதுரை, அக். 1: மதுரை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் அக்.10ம் தேதி 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையும், அக்.13ம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்றுவந்த காலாண்டுத் தேர்வுகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து இன்று(அக்.1) முதல் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. 9 நாள் விடுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு, அக்.10ம் தேதி, அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.