மானாமதுரை, செப்.27: கமுதியில் இருந்து மதுரைக்கு கடத்தி செல்லப்பட்ட 50 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் உள்பட இருவரிடம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மானாமதுரை புதுபஸ்ஸ்டாண்டு அருகே உள்ள நான்கு சக்கர வாகன பழுதுநீக்கும் ஒர்க்ஷாப்பில் நேற்று பகல் 12 மணியளவில் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் வாகனம் ஒன்று நிற்பதாக மானாமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மானாமதுரை போலீசார் உடனடியாக கீழமேல்குடி ரோட்டில் உள்ள அந்த ஒர்க்ஷாப்பிற்கு சென்ற போது சரக்குவேனில் 50 மூட்டைகள் பிளாஸ்டிக் சாக்கில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.