கறம்பக்குடி, செப். 24: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான குறு வட்ட அளவிலான புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை செய்துள்ளனர். தொடர்ந்து புதுக்கோட்டை யில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் மாவட்டத்தில் உள்ள 8 குறுவட்ட அளவிலும் முதல் இடம் பிடித்த 8 அணிகள் பங்கேற்று விளையாடினர். இந்த கால்பந்து இறுதி போட்டியில் கறம்பக்குடி ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை குறுவட்ட அணியை வென்று முதல் இடம் பிடித்து மாநில அளவிலான கால்பந்து போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுள்ளனர்.