மாநில வாலிபால் போட்டி பள்ளி மாணவிகள் தேர்வு

வேதாரண்யம், செப்.24: வேதாரண்யம் குருகுலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நாகை மாவட்ட அளவில் நடந்த வாலிபால் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட பிரிவில் 17 வயதுக்குட்பட்ட பிரிவினும் முதலிடம் பெற்று மாநில அளவில் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விளையாட்டு திடலில் வேதாரண்யம் நாகை கீழையூர் கீவளுர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்ட மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வேதாரண்யம் குருகுலம் பள்ளி மாணவிகள் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மேசை பந்து மற்றும் வாலிபால் போட்டிகள் இரண்டாம் இடமும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் இறகு பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று மாநில அளவில் தேர்வு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகள் குருகுல நிர்வாகி கயிலைமணி வேதரத்தினம் மற்றும் உடற்கல்வி இயக்குனர் கவிதா, தலைமையாசிரியர் செல்வி உட்பட பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.

Related Stories: