தொண்டி,செப்.23: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். தொண்டியை மையமாக ைவத்து 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ளது. இவர்கள் தங்களின் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைக்கு தொண்டியை நாடியே உள்ளனர். ஆனால் தொண்டி பகுதியில் போதிய நகர் பேருந்து வசதி கிடையாது. இது பல்வேறு இன்னல்களை ஏற்படுத்துகிறது. அதனால் பல்வேறு பகுதிக்கு வரும் நகர் பேருந்தை தொண்டி வரையிலும் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானையிலிருந்து வட்டாணம் வரையிலும் வரும் நகர் பேருந்தை தொண்டி வரையிலும் இயக்கினால் அப்பகுதி மக்களுக்கு வசதியாக இருக்கும். இதேபோல் ஆர்.எஸ்.மங்கலத்திலிருந்து உப்பூர் வரையிலும் வரும் நகர் பேருந்தை தொண்டி வரையிலும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.