புதுக்கோட்டை, செப்.22: அரசு தன்னாட்சி பெற்ற கல்லூரியான புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி மாணவர்கள் அதிகாரிகளிடம் தொடார்ச்சியாக கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டமும் நடத்தி வருகின்றனர். ஆனால், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், குடிநீர், கழிப்பிட வசதிகளையாவது உடனே செய்துதர வலியுறுத்தி கல்லூரி முதல்வர் திருச்செல்வத்தை சந்தித்து மாணவர்கள் மனுக்கொடுத்துள்ளனர். அப்போது, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் மிரட்டும் தோனியில் பேசியதோடு மட்டுமல்லாது நான்கு மாணவர்களை சரமாரியாக கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.