அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

அரியலூர், செப்.22: அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (23ம் தேதி) நடைபெறுகிறது. அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: செப்டம்பர் 2022 மாதத்திற்கான அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (23ம் தேதி) காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கொரோனோ காலமாக இருப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Related Stories: