முத்துகிருஷ்ணாபுரத்தில் பஸ் நிறுத்தம்

உடன்குடி, செப். 21: முத்துகிருஷ்ணாபுரத்தில் பேருந்து நிறுத்தத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். உடன்குடி யூனியனுக்குட்பட்ட செட்டியாபத்து பஞ். முத்து கிருஷ்ணாபுரம் விலக்கில் ஐடியல் குழுமம் சார்பில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தம் திறப்பு விழா நடந்தது. செட்டியாபத்து  பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். திருச்செந்தூர் ஆர்டிஓ புகாரி, யூனியன் சேர்மன் பாலசிங், துணை தலைவி மீரா சிராஜூதீன், தொழிலதிபர் ஞானராஜ் கோயில்பிள்ளை, பேரூராட்சி துணை தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் சீயோன்நகர் முத்துச்செல்வன், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞரணி ராமஜெயம், நெசவாளரணி மகாவிஷ்ணு, மாவட்ட பிரதிநிதிகள் ராஜபிரபு, மகேஸ்வரன், மதன்ராஜ், மணப்பாடு ஜெயபிரகாஷ், ஹீபர், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப்கல்லாசி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவிராஜா, மகளிர் தொண்டரணி விஜயா, பேரூராட்சி கவுன்சிலர் ஜான்பாஸ்கர், உடன்குடி நகர பொருளாளர் தங்கம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாய்ஸ், கிளை செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: