குறிஞ்சிப்பாடி, செப். 13:குறிஞ்சிப்பாடியில் புதிய வாரச்சந்தை அமைய உள்ள இடத்தில் உதவி செயற்பொறியாளர் சண்முகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு வேளாண்மை மற்றும் கால்நடைத்துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளார். அதில், குறிஞ்சிப்பாடிக்கு காய்கறி மற்றும் வாரச்சந்தை இல்லாததால், வாரச்சந்தை வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து, குறிஞ்சிப்பாடியில் வாரச்சந்தை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.