காஞ்சிபுரம்: பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை நேரடியாக சந்தித்தது, ஏர்போர்ட் எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். ஆனால், விவசாய நிலத்தை உருவாக்க முடியாது என்று சீமான் பேசினார். சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் தொடர்ந்து பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக பாதிக்கப்படும் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தார்.