ராஜபாளையம், ஆக. 26: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி சார்பில், பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பணியிடைப் பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது. இதில், விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளியைச் சார்ந்த 47 அறிவியல் ஆசிரியர்கள் பங்கேற்றனர். கலசலிங்கம் பல்கலைக்கழக பயோடெக்னாலஜி துறைப் பேராசிரியர் கதிரேசன், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி விலங்கியல் துறைப்பேராசிரியர் பாலாஜி மற்றும் ராஜூக்கள் கல்லூரி பேராசிரியர்கள் சிவராம மூர்த்தி, டேவிட் லாரன்ஸ், சீனிவாசன், உமா சங்கரேஸ்வரி ஆகியோர் அறிவியல் பாடங்களில் உள்ள நுட்பங்கள் மற்றும் நவீன வளர்ச்சி பயிற்சிகளில் வழங்கினர்.