காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழம்பி கிராம ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை எழிலரசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழம்பி கிராம ஊராட்சி நடுநிலைப்பள்ளி இரண்டு கூடுதல் வகுப்பறை கட்ட காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ ஏழிலரசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதி 2020-2021 லிருந்து ரூ. 17.36 லட்சம் நிதி ஒதுக்கினார். இதற்கு கட்டப்பட்ட இரு வகுப்பறைகளை ேநற்று மாணவ, மாணவிகளை கொண்ட எழிலரசன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.