மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை நாகப்பட்டினம் ஆட்சியர், சிறந்த கலெக்டராக தேர்வு

நாகப்பட்டினம், ஆக.11: தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை செய்த கலெக்டர்இ டாக்டர்இ வேலைவாய்ப்பு வழங்கிய தனியார் நிறுவனம்இ அரசு சாராத தொண்டு நிறுவனம்இ சேவை புரிந்த சமூகப் பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை தேர்வு செய்யப்பட்டுஇ விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் 2022ம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது அரசின் மாநில விருதுகள் வழங்குவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவைகள் வழங்கியதற்காக சிறந்த கலெக்டராக நாகப்பட்டினம் கலெக்டர் அருண்தம்புராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல் தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக விருது கலெக்டர்கள் மாநாட்டில் வழங்கப்பட உள்ளது.

Related Stories: