மானூர், ஆக.11: பிஎம் கிசான் திட்டத்தில் நிதியுதவி பெற ஆதார் எண்ணுடன் செல்போனை இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று மானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார். ஒன்றிய அரசின் பிஎம் கிசான் நிதியுதவி திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு மூன்றுமுறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. இதுவரையில் 11 தவணைகள் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவி பெற ஆதார் எண்ணுடன் பிஎம் கிசான் இணையதளத்தில் செல்போன் எண்ணை இணைத்து ஓடிபி பெற்றால் மட்டுமே நிதியுதவி பெற முடியும் என்று வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.