திருமயம் அருகே திருவேட்டழகர் கோயில் வளாகத்தில் சிமெண்ட் கல் தளம் திறப்பு

திருமயம்,ஆக.10: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ராராபுரத்தில் திருவேட்டழகர் கோவில் வளாகத்தில் சிமெண்ட் கல் தளம் அமைக்க பொதுமக்கள், மாவட்ட கவுன்சிலர் குழிபிறை பாண்டியனிடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இந்த கோவில் வளாகத்தில் புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கல் தளம் அமைக்கப்பட்டது. இதனுடைய இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முன்னாள் திருமயம் தொகுதி எம்எல்ஏ வைரமுத்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் அழகு வாத்தியார், மாவட்ட கவுன்சிலர் மணிகண்டன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், நிலவள வங்கி தலைவர் சிவகுமார், ராராபுரம் கவுன்சிலர் பழனியப்பன், ஒன்றிய பாசறை செயலாளர் ராமனாதன், கிளை செயலாளர் முருகேசன், ஊராட்சி செயலாளர் சிதம்பரம், தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ், வார்டு உறுப்பினர் அழகுதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிய மாவட்ட கவுன்சிலர் குழிபிறை பாண்டியனுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Related Stories: