நாமக்கல், ஆக.6: ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து நாமக்கல், குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல்லில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் வீரப்பன், செல்வராஜ், சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; வேலையில்லா திண்டாட்டத்ததை போக்க வேண்டும்; ஜி.எஸ்.டி., குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.