டூவீலர் மோதி முதியவர் பலி

தேனி, ஆக. 4: தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லை நகரில் குடியிருப்பவர் விஜயன்(48). தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் அழகுராஜா(51). நேற்று முன்தினம் இருவரும் டூவீலரில் கோடாங்கிபட்டிக்கு வந்தனர். டூவீலரை கோடாங்கிபட்டி தேவர் சிலை அருகில் நிறுத்தி விட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது,எதிரே வந்த டூவீலர் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியது. இதில் அழகுராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். இதில், விஜயன், அருண், ரன்வீர், ஜீவா உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் தேனிமாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: