தூத்துக்குடி, ஆக. 4: தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவில் இன்று பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. பிரசித்திப் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் அதிகாலை 4.30 மணி, மதியம் 12 மணி, மாலை 3 மணி, இரவு 7.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, அருளிக்கஆசீர், நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்று 9ம் திருநாளை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு 2ம் திருப்பலி, 6.30 மணிக்கு புனித சார்லஸ் ஆலய பங்கு இறைமக்கள், திருச்சிலுவை மழலையர் துவக்கப்பள்ளி, மனையியல் கல்லூரி, புனித சார்லஸ் பள்ளி ஆகியவற்றுக்கான திருப்பலி நடந்தது. 7.30 மணிக்கு புனித யூதாததேயு ஆலய ஆலய பங்குமக்கள், கப்புசின் சபை துறைவியர், திரு இருதய சபை அருட்சகோதரிகள், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான திருப்பலி நடந்தது. 8.30 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்கு மக்கள், 9.30 மணிக்கு புதுக்கோட்டை, அந்தோணியார்புரம் பங்கு மக்கள், பகல் 11 மணிக்கு ரீத்தம்மாள்புரம் பங்கு இறைமக்களுக்கான திருப்பலி நடந்தது. மாலை 5.30 மணிக்கு பெண்கள் பணிக்குழுக்ளுக்கான திருப்பலி நடந்தது. இரவு 7 மணிக்கு பங்குத்தந்தை ஜெரோசின் கலந்து கொண்டு நிறை மீட்பின் ஊற்று அன்னை மரியா என்ற தலைப்பில் மறையுரை ஆற்றினார்.