காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆதி காமாட்சி ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் ஆடி பூரத்தை ஒட்டி ஊஞ்சல் சேவையும், லட்ச தீபமும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே அமைந்துள்ள, ஆதி காமாட்சி கோயில் என அழைக்கப்படும், ஆதி காமாட்சி, ஆதிபீடா பரமேஸ்வரி, காளிகாம்பாள் கோயிலில் ஆடி மாதம் ஆடி பூரத்தை ஒட்டி லட்ச தீபம் நிகழ்வு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு லட்ச தீப நிகழ்ச்சியில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.