நாசரேத், ஜூலை 30: சாத்தான்குளம் அருகே உள்ள பெருமாள்குளத்தை சேர்ந்தவர் மணிமுத்து மகன் சிவபெருமாள் (38). இவர் மீரான்குளம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். மேலும் வாரச்சந்தைகளுக்கு சென்று காய்கனி வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஏரலில் காய்கனி வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரவு லோடு ஆட்டோவில் வந்துள்ளார். நாசரேத் அருகே உள்ள மேல வெள்ளமடம் அருகில் 5 பேர், அவரது வாகனத்தை மறித்துள்ளனர். அவர் வாகனத்தை நிறுத்தியதும் 5பேரும் சிவபெருமாளிடம் பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த 5பேரும் லோடு ஆட்டோவை சேதப்படுத்தி, அதில் காய்கனிகள், தராசு படிக்கற்களை தூக்கி எறிந்துள்ளனர். மேலும் அவதூறாக பேசி சிவபெருமாளை தாக்கியுள்ளனர். பின்னர் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு ஓடிவிட்டனர்.