காயல்பட்டினம் அருகே வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கி மிரட்டியவர் கைது

ஆறுமுகநேரி, ஜூலை 28: காயல்பட்டினம் ஓடக்கரையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் கண்ணன்(30). இவர், நேற்று முன்தினம் காயல்பட்டினம் தைக்காபுரம் பகுதியில் நின்றிருந்தார். அப்போது இதே பகுதியை சேர்ந்த தங்கம் மகன் செந்தில்வேல்(20) என்பவர் பைக்கில் வேகமாக சென்றதாக தெரிகிறது. இதை கண்டித்து கண்ணன் அவரை சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்வேல், கண்ணனிடம் தகராறு செய்து அவரை பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி எஸ்ஐ பிரபு குமார் வழக்கு பதிந்து செந்தில்வேலை கைது செய்தார்.

Related Stories: