கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை

கடலூர், ஜூன் 25:  புவனகிரி வடக்கு திட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பிரவீணா (18). இவர் கடலூர் அருகே உள்ள கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று கல்லூரி விடுதியில் மாணவி பிரவீணா தூக்கில் பிணமாக தொங்கினார். அதனை பார்த்த அங்கிருந்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்து கல்லூரி நிர்வாகத்துக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் இறந்த நிலையில் இருந்த மாணவி பிரவீணாவை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை கல்லூரிக்கு நெல்லிக்குப்பம் போலீசார் அனுப்பி வைத்தனர்.இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி இறந்த காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய கோரி, மாணவியின் உறவினர்கள் கல்லூரி எதிரே நெல்லிக்குப்பம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில், அங்கு வந்த நெல்லிக்குப்பம் போலீசார் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: