காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
காரைக்கால்,ஜூன் 25: காரைக்கால் மாவட்டத்தில் இருந்த அர்ஜூன் ஷர்மா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணி மாறுதலாக அந்தமான் நிக்கோபார் தீவுகள் சென்றார். பின்னர் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவனுக்கு கூடுதல் பொறுப்பாக கவணித்து வந்தார். இந்நிலையில் காரைக்கால் மாவட்ட கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே காரைக்கால் மாவட்டதில் துணை கலெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.