வயநாடு, ஜூன் 25: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு எதிராக, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எப்.ஐ., நடத்திய கண்டன ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வயநாட்டில் உள்ள எம்பி அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர். அனைத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களைச் சுற்றி ஒரு கிலோமீட்டருக்கு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை கட்டாயமாக்குவது தொடர்பாக சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதானால் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் உள்ள ஒரு கிலோமீட்டரில் ஆட்கள் வசிப்பது பற்றி ஆய்வு செய்ய கேரள வனத்துறை குழு ஒன்றை அமைத்துள்ளது. இதனால் மலை மாவட்டமாக உள்ள வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி எம்பியாக இருந்தாலும் இதுபற்றி அவர் எதுவும் பேசவில்லை என கூறப்படுகிறது.