ஒரத்தநாடு,ஜூன்11: ஒரத்தநாடு காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசிவிஸ்வநாதர் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு விசாலாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து பக்தகோடிகள் நேர்த்திக்கடனாக முளைப்பாரி ஏந்தி தேர் வரும் சாலையில் வாணவேடிக்கை முழங்க ஊர்வலமாக மீண்டும் கோவில் வளாகம் சென்றடைந்தனர்.