திருமயம் அருகே மலையடி பள்ளத்திற்கு குளிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலி

திருமயம், ஜூன் 9: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மாமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (75). இவர் அப்பகுதியில் உள்ள மலையடிபள்ளத்திற்கு குளிக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரைத் தேடி மலையடி பள்ளத்திற்கு சென்றனர். அங்கு ஆரோக்கியசாமி நீரில் மூழ்கி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து நமணசமுத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நமணசமுத்திரம் போலீசார் ஆரோக்கியசாமி உடலை கைப்பற்றி திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: