நெல்லை, ஜூன் 4: முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் தமிழக சபாநாயகர் அப்பாவு மரக்கன்று நட்டார். கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, பேட்டை ராணி அண்ணா கல்லூரியில் நடந்தது. விழாவில் அப்துல்வகாப் எம்எல்ஏ, மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கலெக்டர் விஷ்ணு, வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் தமிழக சபாநாயகர் அப்பாவு மரக்கன்று நட்டார்.