இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய இருவர் மீது வழக்கு

விராலிமலை,மே 31: இலுப்பூர் அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். இலுப்பூர் சுற்றுப்பகுதிகளில் அனுமதியின்றி ஆற்று மணல் மற்றும் கிராவல் மணல் அள்ளப்பட்டு கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பிலிப்பட்டி பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பிலிப்பட்டி குளக்கரையில் ஆற்று மணலை அனுமதியின்றி அள்ளி டிராக்டரில் கடத்த முயன்ற துரை மற்றும் தங்கதுரை ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை ஒரு யூனிட் மணலுடன் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: