மொடக்குறிச்சி, மே 26: மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த ஜமாபந்தியில் மொடக்குறிச்சி, அரச்சலூர் உள்வட்டத்தில் 162 மனுக்கள் பெறப்பட்டது.மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடைபெற்றது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் இலாஹிஜான் தலைமை தாங்கினார். மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மாசிலாமணி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஜமாபந்தியில் மொடக்குறிச்சி உள் வட்டத்திற்குட்பட்ட லக்காபுரம், சாத்தம்பூர், குருக்கம்பாளையம், காங்கயம்பாளையம், மொடக்குறிச்சி, எழுமாத்தூர், ஈஞ்சம்பள்ளி, புஞ்சை காளமங்கலம், நஞ்சை காளமங்கலம், நஞ்சை ஊத்துக்குளி, குலவிளக்கு, பழமங்கலம் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உள்ளிட்ட 80 மனுக்கள் பெறப்பட்டது.