கஞ்சாவுடன் 3 பெண்கள் கைது

திருவில்லிபுத்தூர், மே 21: திருவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்து பணிமனை அருகே விற்பனைக்காக இரண்டு பெண்கள் கஞ்சா வைத்துக்கொண்டு நிற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவில்லிபுத்தூர் நகர் சப் இன்ஸ்பெக்டர் மருதுபாண்டி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அபோது சத்யா(32), ராக்கு(61) ஆகிய இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் மருதுபாண்டி ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார். மேலும் அவர்களிடமிருந்து ரூ.1250 பணத்தையும் பறிமுதல் செய்தார். இதேபோல் அய்யம்பட்டி சாவடி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்துக்கொண்டிருந்த முருகேஸ்வரி(48) என்பவரையும் நகர் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.690ஐ பறிமுதல் செய்தனர்.

Related Stories: