வத்திராயிருப்பு பேரூராட்சி கூட்டம்

வத்திராயிருப்பு, மே 21: வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் அவசரக்கூட்டம் பேரூராட்சி தலைவர் தவமணி தலைமையில் துணைத்தலைவர் பஞ்சு, செயல் அலுவலர் பொறுப்பு வெங்கடகோபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சொத்துவரி சீராய்வு இறுதி செய்வது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனா். அதனை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மதுரை மண்டலம் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமனுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதாவது: வத்திராயிருப்பு ேதர்வு நிலை பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்திருந்தனர்.

Related Stories: