கடையம் அருகே நீர்மோர் பந்தல்

கடையம்,மே 7: கடையம் அருகே ஆசீர்வாதபுரம் மற்றும் திருமலையப்பபுரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இதில் கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன் தலைமை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி மதிவாணன், பொன்செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், அஞ்சான் கட்டளை பஞ்.துணை தலைவர் சுதன், கிளை செயலாளர்கள் சிவனையா, ரவிசங்கர் பண்டாரசாமி, நிர்வாகிகள் ஞானையா, கருத்தபாண்டி, தாவீது மோசை, துரைராஜ் பாண்டியன், நாரயணன், அருள்ராஜ், ராஜபால், ஆசிரியர் பலவேசம், பரமசிவன், நடராஜன், மகேந்திரன், பாலாஜி கண்ணன், மங்கள கண்ணன் கலந்து கொண்டனர்.

The post கடையம் அருகே நீர்மோர் பந்தல் appeared first on Dinakaran.

Related Stories: