மதுரை புதூரை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பானடியை சேர்ந்த கவிபாலன் (23)க்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பலாத்காரம் செய்த கவிபாலன் திருமணத்திற்கு மட்டும் மறுத்துள்ளார். இதேபோல் சிவகங்கை அண்ணா நகரை சேர்ந்த 25 வயது பெண்ணை, மதுரை அல்அமீன் நகரை சேர்ந்த முகமது பைசல் காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்து திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதுகுறித்து மாணவி, அப்பெண் புகாரில் தல்லாகுளம் மகளிர் போலீசார் கவிபாலன், முகமது பைசனை கைது செய்தனர்.