திருக்கோவிலூர், மே 18: திருக்கோவிலூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் கோவிந்தன் (65). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் சொந்த வேலை நிமித்தமாக நேற்று வீரபாண்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருக்கோவிலூர் சென்று பணியை முடித்துவிட்டு மீண்டும் வீரபாண்டிக்கு வந்து கொண்டிருந்தார். தேவனூர் ரைஸ் மில் எதிரில் வந்தபோது இவரது வாகனமும் அரகண்டநல்லூர் அடுத்த புத்தூர் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் திருக்கோவிலூர் என் ஜி ஜி ஓ நகர் பகுதியை சேர்ந்த தேவசகாயம், கார்த்திகேயன் ஆகியோர் வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் பலத்த சத்தத்துடன் மோதிக்கொண்டன.