நீடாமங்கலத்தில் கூரை வீட்டில் தீ விபத்து

நீடாமங்கலம், மே 14: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காமராஜர் காலனி 5வது குறுக்குத் தெருவில் இஸ்மாயில் மகன் ஜெகபர் அலி (40) என்பவரது கூரை வீடு உள்ளது. இவர் அருகில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாதபோது வீடு தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன், சிறப்பு நிலைய அலுவலர் பார்த்திபன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஷோபா, கட்டில் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது. இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் குறித்து நீடாமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: