மதுரை, மே 13: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் 202ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி தமிழில் உறுதிமொழியை மதுரையில் செவிலியர்கள் எடுத்துக்கொண்டனர். பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில் சர்வதேச செவிலியர் தினமாக பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளை உலக நர்சுகள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சர்வதேச செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு நர்சுகள் சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் திலகவதி ஜெயராஜ் தலைமையில் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள நர்சுகள் விடுதி வளாகம் முன்பாக, பிளாரன்சு நைட்டிங்கேல் சிலை முன்பு நர்சுகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.