ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 19 பேர் கைது

பவானி, மே 12: தமிழக நலனுக்கு புறம்பாக செயல்படும் ஆளுநரை கண்டித்து பவானியில் அந்தியூர் மேட்டூர் பிரிவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தமிழ் புலிகள் கட்சியினர் அறிவித்திருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்ப்புலிகள் கட்சி  தெரிவித்திருந்தனர். இதனால், அந்தியூர் பிரிவில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்ட நிர்வாகி வேங்கை பொன்னுசாமி உள்பட 12 பேரும், எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 7 பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Stories: