சென்னை, மே 11: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் (திமுக) பேசுகையில், ‘ராஜபாளையம் தொகுதியில் உள்ள சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி மற்றும் மேலூர் துரைசாமிபுரம் ஊராட்சி பகுதிகளுக்கு சேத்தூர் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் செல்கிறது. ஆனால், அதில் தென்னை மரம் விழுவதினால் மின்தடை ஏற்பட்டு சொக்கநாதன்புத்தூர் மற்றும் மேலூர் துரைசாமிபுரத்தில் உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நேற்றுகூட (நேற்று முன்தினம்) அந்த மாதிரி மரம் விழுந்து மின்சாரம் போயிருக்கிறது. அது சம்மந்தமாக பள்ளி மாணவர்கள் என்னிடம் பேசினார்கள். தென்காசி மாவட்டம் சிவகிரியின் அருகில் துணை மின்நிலையம் இருக்கிறது.