ஊட்டி,ஏப்.26: நீலகிரி மாவட்டத் திட்ட அலுவலரும் முதன்மை கல்வி அலுவலருமான நாசருதீன் ஆணைப்படியும், திட்ட உதவி அலுவலர் குமார் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மா வழிகாட்டுதல் படி கோத்தகிரி அருகே குண்டாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்ய பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் அரகம்பை கிருஷ்ணன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன், கவுன்சிலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் பேசுகையில், பெற்றோர், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், சமுதாய பங்கேற்புடன் அமைக்கப்படும் இந்த அமைப்பு மாணவர் சேர்க்கை, இடைநிற்றல் நீக்குதல், நிதி ஆதாரம், பள்ளி மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பள்ளியின் முழு வளர்ச்சிக்கு உதவக்கூடிய உயிரோட்டமான அமைப்பாக இருக்கும் என்றார்.
41 பெற்றோர்கள், ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.