திருப்புத்தூர், ஏப்.25: கிராமங்களின் மேம்பாட்டிற்காக கிராம சபை கூட்டம் நடத்தப்படுகின்றன என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியம் துவார் ஊராட்சியில் நேற்று பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, துவார் ஊராட்சிமன்றத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலை வகித்தார். கிராமசபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். அமைச்சர் பெரியகருப்பன் கூட்டத்தில் பேசியதாவது: