ஆண்டிபட்டி, ஏப். 21: ஆண்டிபட்டி அருகே க.விலக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு நூற்றுக்கணக்கான செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் தலைமையில் செவிலியர் குடியிருப்பு வளாகத்தில் நைட்டிங்கேல் அம்மையாரின் சிலை நிறுவ முடிவு செய்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பூமி பூஜை நடத்தப்பட்டது.